For Daily Alerts
Just In
வைகோவின் பேச்சுக்கள் நூலாக வெளியீடு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பான "முத்தமிழ் முக்கனிகள்" என்ற நூல்வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அஞ்சலி செலுத்த நடந்த விழாவில் வைகோ பேசியது, கண்ணதாசன் நூல்வெளியீட்டு விழாவில் கலந்து காண்டு பேசியது, இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டுபேசியது ஆகியவற்றின் தொகுப்புகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
வைகோவின் தனிச் செயலாளர் அருணகிரிநாதன் இந்த பேச்சுக்களைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்.
Story first published: Thursday, February 28, 2002, 5:30 [IST]