For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் ரயில் எரிப்பு சம்பவம்: ஜெ., கருணாநிதி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டு, 58 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வராகப்பதவியேற்கவுள்ள ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த இந்த ரயில் எரிப்புச் சம்பவம் மிகவும் கொடூரமானது.

சிறுபான்மையினர் தாக்கப்படும் போதெல்லாம், அதைக் கண்டித்து அறிக்கை விட வரிந்து கட்டிக் கொண்டுசெல்லும் சில அரசியல் கட்சிகள், இதுபோன்ற பெரும்பான்மையினர் தாக்கப்படும்போது அமைதியாக இருப்பதுவேதனைக்குரியது.

அரசியல் சட்டத்தின்கீழ் சில உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்ள சிறுபான்மையினரைப் போல இந்தப்பெரும்பான்மையினருக்கும் உண்டு.

இந்த ரயில் எரிப்புச் சம்பவத்திற்குக் காரணமான கொலையாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க மத்திய அரசும்குஜராத் அரசும் முன்வர வேண்டும் என்று ஜெயலலிதா அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பெரிய அளவில் வன்முறை ஏதும்ஏற்படாமலிருக்க மத்திய-மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுகூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X