சென்னை சென்ட்ரலில் ரயில் மறியல் செய்ய முயன்ற 33 இந்து முன்னணியினர் கைது
சென்னை:
குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தைக் கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை)மறியல் செய்ய முயன்ற 33 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
அயோத்தி சென்று திரும்பிக் கொண்டிருந்த ராம பக்தர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகளைகுஜராத் மாநிலம் கோத்ரா நகர் ரயில் நிலையத்தில் சில சமூக விரோதிகள் எரித்தனர்.
இந்தச் சம்பவத்தில் 58 பேர் உயிருடன் எரிந்து போனார்கள். இதையடுத்து குஜராத்தின் பெரும்பாலான நகரங்களில்வன்முறை வெடித்துள்ளது. அகமதாபாத், பரோடா, காந்திநகர் உள்பட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட சென்னையில் உள்ள இந்துமுன்னணியினர் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடிய இந்து முன்னணியினர், ரயில்களை மறிக்கமுயன்றனர்.
இதையடுத்து ரயிலை மறிக்க முயன்ற 33 இந்து முன்னணியினரைப் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications