வழக்கை வாபஸ் பெற்ற ஜெ.
டெல்லி:
டான்சி மற்றும் நிலக்கரி ஊழல் வழக்குகளைத் தன் மேல் தொடர அனுமதியளித்த தமிழக முன்னாள் ஆளுநர்சென்னா ரெட்டியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அதிமுக பொதுச் செயலாளரும் மீண்டும்தமிழக முதல்வர் பதவியை ஏற்கவுள்ளவருமான ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை) வாபஸ் பெற்றுக்கொண்டார்.
கடந்த 1995ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவர் மீது டான்சி மற்றும் நிலக்கரி ஊழல் வழக்குகளைத்தொடர சென்னா ரெட்டியிடம் ஜனதா கட்சித் தலைவர் அனுமதி கேட்டிருந்தார்.
சென்னா ரெட்டியும் அதற்கு அனுமதி அளித்தார். இதையடுத்து சுவாமி தொடுத்த வழக்குகள்தான்ஜெயலலிதாவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளாக உருவெடுத்தன.
இதனால் சென்னா ரெட்டியை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன் மீது வழக்குதொடர்வதற்காக அனுமதி தருவதற்கு சென்னா ரெட்டிக்கு அதிகாரம் இல்லை என்று தன் மனுவில் ஜெயலலிதாகுறிப்பிட்டிருந்தார்.
அப்படியே ஆளுநருக்கு அதிகாரம் இருந்தாலும் தன்னுடைய அமைச்சரவையின் ஆலோசனையைக் கூடக்கேட்காமல் சென்னா ரெட்டி எப்படி தன் மீது வழக்கு தொடர அனுமதி தரலாம் என்றும் தன் மனுவில் ஜெயலலிதாகேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கிடையே இந்த 2 வழக்குகளிலும் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால்சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தற்போது இந்த 2 வழக்குகளிலுமிருந்து ஜெயலலிதாவிடுதலையாகிவிட்டார்.
இதையடுத்து சென்னா ரெட்டிக்கு எதிராகப் போடப்பட்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள ஜெயலலிதாமுடிவெடுத்தார்.
அதன்படி ஜெயலலிதாவின் வழக்கறிஞரான வேணுகோபால் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள்விடுத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.பி. பரூச்சா, நீதிபதி ஆர்.சி. லஹோத்தி, நீதிபதி என். சந்தோஷ் ஹெக்டே,நீதிபதி ரூமா பால் மற்றும் நீதிபதி அரிஜித் பசாயத் ஆகியோரடங்கிய பெஞ்ச் இன்று வேணுகோபாலிடம் சிலகேள்விகளைக் கேட்டபின்னர் வேணுகோபாலிடம் அந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதற்கு அனுமதிஅளித்தனர்.
டான்சி வழக்கு தொடர்பான ஒரு அப்பீல் வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் இருந்த போதிலும், ஜெயலலிதாஇந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள முடிவெடுத்தார் என்று வேணுகோபால் நிருபர்களிடம் தெரிவித்தார்.