ஈவ் டீசிங்: இளம் பெண் தற்கொலை - 2 பேர் கைது
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் ஈவ் டீசிங் காரணமாக இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈவ் டீசிங் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வது தற்போது குறைந்துள்ளநிலையில் திருநெல்வேலியில் அது தலை தூக்கியுள்ளது.
திருநெல்வேலி-பாளையங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் வேலைக்குச் செல்லும்போதெல்லாம் ஜோதிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த வினோத் மற்றும் ஜெயேந்திரன் என்ற 2 இளைஞர்களும் கேலிசெய்து வந்துள்ளனர்.
அவர்களது கேலி ஆபாச கட்டத்தை எட்டியதால் ராஜேஸ்வரி தனது சகோதரரிடம் புகார் செய்தார். உடனடியாகஅந்த 2 இளைஞர்களையும் ராஜேஸ்வரியின் சகோதரர் மிரட்டியுள்ளார். இருப்பினும் அந்த இளைஞர்கள் அதைப்பொருட்படுத்தவில்லை.
இதனால் மனம் உடைந்த ராஜேஸ்வரி, கடந்த புதன்கிழமை மாலை தனது வீட்டில் மண்ணெண்ணை ஊற்றித்தீவைத்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் வினோத் மற்றும் ஜெயேந்திரன் ஆகிய 2 பேரையும் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications