For Daily Alerts
Just In
மண்ணில் புதைந்த 6 தொழிலாளிகள் உயிருடன் மீட்பு
சென்னை:
சென்னையில் அஸ்திவாரம் தோண்டியபோது மண்ணில் புதைந்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னை காந்தி நகர் பகுதியில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினார்கள். அப்போது 6 தொழிலாளர்கள் மண்சரிந்து உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புவீரர்கள் மண்ணில் புதைந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Comments
Story first published: Friday, March 1, 2002, 5:30 [IST]