ஹெலிகாப்டர் நொறுங்கி மக்களவை சபாநாயகர் பாலயோகி மரணம்
டெல்லி:
ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார் 8 மணிக்கு ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்துவிபத்துக்குள்ளானதில் மக்களவை சபாநாயகர் பாலயோகி உயிரிழந்தார்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்திலிருந்து தனியார் ஹெலிகாப்டரில் பாலயோகி சென்றுகொண்டிருந்தார்.
கிருஷ்ணா மாவட்டம் கைக்கலூர் அருகே அந்த ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று அதுநொறுங்கி ஒரு குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பாலயோகி, அவருடைய உதவியாளர் கே.எஸ். ராஜு, பாதுகாவலர் மற்றும் அந்த ஹெலிகாப்டரின்பைலட் ஆகியோர் உயிரிழந்தனர்.
நேற்று இரவு ரயில் மூலம் செகந்திராபாத்துக்குப் போவதாகத்தான் பாலயோகி திட்டமிட்டிருந்தார். ஆனால் விதிவேறுவிதமாக விளையாடியது. நேற்று அவர் இருந்த பிஸியில் அந்த ரயிலைப் பிடிக்க முடியவில்லை.
இதனால் இன்று காலை அவர் ஹெலிகாப்டரில் கிளம்பினார். அது நொறுங்கி விழுந்து அவருடைய உயிரையேபலி வாங்கிவிட்டது. இறந்தவர்களின் உடல்கள் எலுரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் சில அமைச்சர்கள் அந்தமருத்துவமனைக்கு விரைந்தனர்.
பின்னர் பாலயோகியின் உடல் ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நாளைஉடல் தகனம் நடைபெற உள்ளது.
மேல்மருவத்தூர் பக்தர் பாலயோகி
இறந்து போன பாலயோகி ஒரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோவிலுக்கு பாலயோகி அடிக்கடி சென்று வழிபடுவது வழக்கம்.
அதேபோல் ஒவ்வொரு முறை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரும் திருப்பதி மற்றும்மேல்மருவத்தூர் கோவில்களுக்குச் செல்வதையும் பாலயோகி வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்தில் பாலயோகி பலியானதற்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், துணைஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள்இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாஜ்பாய், சோனியா காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் நாளை நடைபெறவுள்ள பாலயோகியின்இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார்கள்.
மத்திய அமைச்சரவை இரங்கல்
இதற்கிடையே பாலயோகியின் மறைவுக்கு மத்திய அமைச்சரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.
இன்று பிற்பகல் டெல்லியில் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அமைச்சர்கள்பாலயோகியை நினைவு கூர்ந்து இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications