இளம் சபாநாயகரை இந்தியா இழந்தது: பாலயோகிக்கு ஜெ. இரங்கல்
சென்னை:
ஹெலிகாப்டர் விபத்தில் மக்களவை சபாநாயகர் பாலயோகி இறந்ததன் மூலம் இளம் சபாநாயகர் ஒருவரைஇந்தியா இழந்துவிட்டது என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று(ஞாயிற்றுக்கிழமை) கூறினார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கட்சி வேறுபாகளின்றி பொறுமையுடன் மக்களவையில் செயல்பட்ட பாலயோகியின் இந்தத் திடீர் மரணத்தால்நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் அன்பையும் பெற்றவர் பாலயோகி.
பாலயோகியின் இழப்பின் மூலம் நாடு ஒரு இளம் சபாநாயகரை இழந்து தவிக்கிறது.
அவரை இழந்து தவிக்கும் பாலயோகியின் குடும்பத்தினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்களுக்கும்என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவ்வறிக்கையில் ஜெயலலிதாகுறிப்பிட்டுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தமாகா தலைவர் வாசன்,எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், தமிழக மதச்சார்பற்ற ஜனதா தள செயலாளர் ஜி.கே. தாஸ், புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட பல தலைவர்களும்பாலயோகியின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக, ஆந்திர ஆளுநர்கள் இரங்கல்
இதற்கிடையே தமிழக மற்றும் ஆந்திர ஆளுநர்கள் ஆகியோரும் பாலயோகியின் மரணத்திற்கு இரங்கல்தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா மட்டுமல்ல இந்த நாடே ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டது என்று தமிழக ஆளுநர் பி.எஸ்.ராமமோகன் ராவ் தன்னுடைய இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications