தங்கபாலுவை நீக்கக் கோரி இளங்கோவன் கோஷ்டி ரத்தக் கையெழுத்து
சென்னை:
இதுவரை திராவிடக் கட்சிகளில் மட்டுமே இருந்து வந்த ரத்தக் கையெழுத்து போன்ற நாகரீகமான செயல்கள்காங்கிரசுக்கும் பரவியுள்ளது.
அங்கு கட்சித் தலைவர் இளங்கோவனுடன் மோதி வரும் தங்கபாலுவை கட்சியிலிருந்து நீக்க கோரி காங்கிரஸ்தொண்டர்கள் 100 பேர் ரத்த கையெழுத்து போட்ட கோரிக்கை மனுவை மூத்த காங்கிரஸ் தலைவர் பிரணாப்முகர்ஜியிடம் கொடுத்துள்ளனர்.
சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளிகள் அதிமுகவுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளனர். இவர்கள் சுயலாபத்துக்காக கட்சியையே ஜெயலலலிதாவிடம் அடகு வைப்பதாக இளங்கோவன் கூறி வருகிறார்.
குறிப்பாக தங்கபாலு, யசோதா ஆகியோர் அதிமுகவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் தங்கபாலுவை கட்சியிலிருந்து நீக்க மேலிடத்திடம் கோரிக்கை வைப்பேன் என்று இளங்கோவன்கூறியிருந்தார். அதே போல் டெல்லிக்கு சென்று சோனியாவையும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலைகட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியும் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் சென்னைமாவட்ட காங்கிரஸ் தலைவர் புரசை கே.பெருமாள் தலைமையில் 100 பேர் ரத்த கையெழுத்து போட்ட கோரிக்கைமனுவை பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியின் தன்மானத்தையும்,பெருமையையும் மக்கள் மத்தியில் நிலை நிறுத்துவதற்கு கடுமையாக உழைத்து வருகிறார்.
தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். பல தரப்பு மக்களையும் சந்தித்து வருகிறார். இதானால்சமுதாயத்தின் பல்வேறு மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
ஆகவே மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராகிய நானும், மாவட்டத்திலுள்ள தொண்டர்கள்அனைவரும் தலைவர் இளங்கோவனை முழு மனதுடன் ஆதரிக்கின்றோம்.
காங்கிரஸ் கட்சியின் பெருமையை குலைக்கும் வகையில் வெளிப்படையாக அறிக்கைகள், பேட்டிகள் கொடுக்கும்தங்கபாலு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவரை கட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், மூத்த தலைவராகியநீங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
ரத்த வாடையுடன் தரப்பட்ட இந்த மனுவை வாங்கிய முகர்ஜி ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டார். பின்னர்சுதாரித்துக் கொண்டு, மேலிடத்தில் பேசுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து உடனடியாகக் கிளம்பினார்.












Click it and Unblock the Notifications