ப்ளஸ் 2 தேர்வுகள் தொடங்கின: மே 20-ல் முடிவு
சென்னை:
தமிழகம் முழுவதும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது.
தமிழ் முதல் தாள் தேர்வுடன் இன்று ப்ளஸ் 2 தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 4,29,864 பேர் ப்ளஸ் 2தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வர்களும், இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதுபவர்களும் இந்தக் கணக்கில்வரவில்லை.
இதற்காக மொத்தம் 1,301 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் 126 மையங்களில்தேர்வுகள் நடந்தன. இன்று தொடங்கிய தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிவடையும்.
தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் காப்பி அடிப்பதைத் தடுக்கும் வகையில் அதிக அளவில் பறக்கும் படையினர்நியமிக்கப்பட்டுள்ளனர்.
காப்பி அடித்துப் பிடிபடும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படுவார்கள் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சில மையங்களுக்கு கல்வி அமைச்சர் தம்பிதுரை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போதுஅவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூடுதலாக 30,000 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு முடிவுகள் மே மாதம்20ம் தேதியிலிருந்து 25ம் தேதிக்குள் அறிவிக்கப்பட்டுவிடும்.
பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகளிகளில் சேர்வதற்கான கவுன்சிலிங்குகள் ஜூன் மாதத்திற்குள்முடிக்கப்பட்டு, ஜூலை 15ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுவிடும் என்று தம்பிதுரை கூறினார்.












Click it and Unblock the Notifications