வீரப்பன் மனைவி, மாமனார் கைது: ரூ. 27 லட்சம் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியையும் அவரது உறவினர்கள் 6 பேரையும் கர்நாடக சிறப்புஅதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.

இவர்களிடமிருந்து ரூ. 27 லட்சம் பணமும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

முத்துலட்சுமியின் தந்தை ஐய்யன் பூசாரி, தம்பி சங்கோபலன், உறவினர்களான பச்சைமுத்து, பர்சலமடு, ராஜமாறன்,முத்துக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜ்குமார்கடத்தலுக்கு இவர்கள் வீரப்பனுக்கு பெருமளவில் உதவியுள்ளனர்.

அவரை விடுவிக்க இரு மாநில அரசுகளும் ரகசியமாய் தந்த கோடிக்கணக்கான பணத்தை இவர்கள் பங்குபோட்டுள்ளனர்.

இவர்கள் 15 நாள நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மைசூரில் இருந்து வரும் போலீஸ் தகவல்கள்தெரிவிக்கின்றன.

ஆனால், இதை உறுதி செய்ய வழக்கம்போல தமிழக அதிரடிப் படையினர் மறுத்துவிட்டனர்.

நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்ததை பல வாரங்கள் நமது அதிரடிப்படை மறுத்து வந்ததுநினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+