For Daily Alerts
Just In
திருமாவளவன் இனி பொதுச் செயலாளர்
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் அமைப்பாளராக இருந்து வந்த திருமாவளவன் இனிமேல் பொதுச் செயலாளராகசெயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுக் குழுக் கூட்டம் தொழுதூரில் நடந்தது. இதில் அமைப்பாளர் பதவியை பொதுச்செயலாளர் பதவியாக மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இதுவரை அமைப்பாளராக இருந்து வந்த திருமாவளவன் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.இதேபோல அமைப்பின் பிற பொறுப்பாளர்களும் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
குஜராத் வன்றையைக் கண்டித்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Comments
Story first published: Tuesday, March 5, 2002, 5:30 [IST]