தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கேட்கிறார் கிருஷ்ணசாமி
சென்னை:
தனியார்துறை வேலை வாய்ப்பிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யும் வகையில்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் கிருஷ்ணசாமி கூறியதாவது:
தனியார் துறை வேலை வாய்ப்பிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் வகையில்சட்டம் கொண்டு வர வேண்டும்.
இது குறித்து டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்தேன். மேலும்நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தும் வலியுறுத்தினேன்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட ஊழியர்கள் பிரச்சனையில் அரசு விரைவில் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி உட்பட தலித்துக்கள் அதிகம் வசிக்கும் 4 பஞ்சாயத்து யூனியன்களிலும் உள்ளாட்சிதேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும். இல்லையெனில் 27ம்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று கிருஷ்ணசாமி கூறினார்.