ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்கிறார் அன்பழகன்
சென்னை:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற விழாவில் எதிர்க் கட்சித் தலைவரும் திமுக பொதுச் செயலாளருமானஅன்பழகனுக்கு 6வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து அரசு அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும்என்று அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு அன்பழகன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நியாயப்படி எனக்கு 16வது இடம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 98வது சீட்டைத்தான் எனக்கு ஒதுக்கிஇருந்தார்கள்.
இருந்தாலும் இந்தச் சம்பவத்திற்கு தாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்சனையை இதற்கு மேலும் வளர்க்க நான் விரும்பவில்லை.
ஆனால் அரசு அதிகாரிகள் சீட் ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை ஒப்புக் கொள்ள மறுத்து வருகின்றனர்.
எனவே அவர்கள் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று அன்பழகன் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.