சேப்பாக்கத்தில் கருணாநிதி அலுவலகம் திறந்தது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தொகுதி எம்.எல்.ஏவான திமுக தலைவர் கருணாநிதி அங்கு ஒரு அலுவலகத்தைத் திறந்துள்ளார்.

வாலாஜா சாலையில் அமைந்துள்ள அந்த அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி அவர் திறந்து வைத்தார். பின்னர் தொகுதியின் பல்வேறுஇடங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்காக எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ரூ. 19 லட்சத்தை ஒதுக்கி செக்கில் கையெழுத்துப் போட்டார்.

பின்னர் சிறிது நேரம் அந்த அலுவலகத்தில் அமர்ந்திருந்த கருணாநிதியின் காலில் விழுந்து திமுக மகளிரணியினர் ஆசி பெற்றனர்.

சட்டமன்றத்துக்கு வராமல் தன்னைத் தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் தொகுதி மக்களை கருணாநிதி அவமானப்படுத்துகிறார் என்று அதிமுக கூறிவருகிறது.

ஆனால், சட்டமன்றத்துக்கு வராவிட்டாலும் கூட எனது தொகுதிக்குரிய பணிகளை நான் ஒழுங்காக செய்கிறேன் என்று கூறி அந்தக்குற்றச்சாட்டை கவுண்டர் செய்யும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மேலும் சட்டமன்றத்துக்கு வராமல் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படிநடக்கும்பட்தத்தில் சட்டமன்றம் நடக்கும் நாட்களில் இந்த அலுவலகத்தில் வந்து அமர்ந்து தனது பணிகளைக் கவனிப்பார் கருணாநிதி.

சென்னை மாநகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின், சைதை கிட்டு, ரகுமான்கான் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+