சட்டசபை இன்று கூடுகிறது: பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் சனிக்கிழமை காலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு சட்டசபை கூடுகிறது. இந்த ஆறு மாத காலத்தில் பன்னீர் செல்வம் முதல்வராகஇருந்தார். அவர் முதல்வர் பதவி வகித்தபோது ஒரு முறை கூட சட்டசபை கூட்டப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆளுநர் ராம் மோகன் ராவ் அரசின் திட்டங்களைக் கொண்ட அறிக்கையை வாசித்து சட்டசபைக் கூட்டத் தொடரைதுவக்கி வைக்கிறார். அதன் பிறகு கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
பிறகு திங்கள்கிழமை 11ம் தேதி சபை மீண்டும் கூடும். அப்போது ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கும்.
இந்த முறை சட்டசபை கூடும்போது சபையில் வித்தியாசமான சூழ்நிலை நிலவுகிறது. திமுக கூட்டணியில் இதுவரைஇடம் பெற்றிருந்த பல தோழமைக் கட்சிகள் ( விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம்)இப்போது அவர்களுடன் இல்லை.
அதேபோல, அதிமுக கூட்டணியில் இதுவரை இடம் பெற்றிருந்த தோழமைக் கட்சிகளும் (இரு கம்யூனிஸ்ட்கட்சிகள், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ்) அவர்களுடன் இப்போது இல்லை.
மேலும், எம்.ஜி.ஆர். அதிமுகவுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அவர்களில் ஆஸ்டின் அதிமுகவில் சேர்ந்துவிட்டார். மற்றவரான அரசன் பாஜகவில் சேர்ந்து விட்டதால் தன்னையும் பா.ஜ.க. உறுப்பினர்களோடு அமர வைக்கவேண்டும் என்று கூறியுள்ளார். எனவே, சபையில் எம்.ஜி.ஆர். அதிமுகவே இனி இருக்காது.
கடந்த ஆளுநர் உரையை திமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இந்த முறை என்ன செய்யப் போகிறார்கள்என்பது தெரியவில்லை.
அன்பழகனுக்கு முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவின்போது 6-வது வரிசையில் இடம் கொடுத்தது, மதுரைஅருகே தீவிரவாதிகள் தப்பிய சம்பவம், நிதி நெருக்கடி, பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்குறித்து சட்டசபையில் சூடான விவாதங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஆன பிறகு முதல் முறையாக ஜெயலலிதா சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். முதல்வராகஇருந்தபோது சட்டசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பாக்கியத்தை இழந்த பன்னீர் செல்வம் இப்போதுபதவியை ராஜினாமா செய்த பிறகு சாதாரண அமைச்சராகவே சட்டசபைக் கூட்டத்தில் பங்கு பெறுகிறார் என்பதுமுக்கியமான அம்சமாகும்.












Click it and Unblock the Notifications