கணவன் எதிரே பெண்ணைக் கற்பழித்த கும்பல்: 3 பேர் கைது
ஈரோடு:
ஈரோட்டில் கணவன் எதிரே பெண் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் உள்ள வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் ராமன். அவரது மனைவி ஸ்ரீதேவி (20).இவர்கள் சம்பவத்தன்று மாலையில் வைராபாளையம் காவிரி ஆற்று படுகைக்கு குளிக்க சென்றனர்.
பிறகு இருவரும் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இந்த பெண்யார்? என்று கேட்டுள்ளது. இவள் என் மனைவி என்று ராமன் கூறியுள்ளார். இதன் பின்னர் ராமனை அந்தக் கும்பல்அடித்தது.
4 பேர் ராமனை பிடித்துக் கொள்ள, மற்ற 3 பேரும் ஸ்ரீதேவியை மாறி மாறி கற்பழித்துள்ளனர். உதவி கேட்டுஸ்ரீதேவி சத்தம் போடவே அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். அதனால் அந்த 7 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
அதன் பிறகு ராசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவனைக்கு சென்று ஸ்ரீதேவி சிகிச்சை பெற்றுள்ளார். பிறகு ஈரோடுக்குவந்து கருங்கல்பாளையம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வைராபாளையத்தை சேர்ந்த முருகேசன் (31), குஞ்சப்பன்என்ற தமிழ்செல்வன் (27), கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த முருகன் (25) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தலைமறைவாகி இருக்கும் வைராபாளையத்தை சேர்ந்த கணேசன் (22), ரமேஷ் (27), சேட்டு,திருநகர் காலனியை சேர்ந்த தங்கராஜ் (18) ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications