சேலம் அருகே சாலை விபத்தில் 14 பேர் பலி
சென்னை:
சேலம் அருகே மேச்சேரி என்ற இடத்தில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 14 பேர் உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு சேலத்திலிருந்து மேட்டூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல, சேலம் நோக்கி ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.
இரு பஸ்களும் மேச்சேரி அருகே ஒரு பாலத்தில் வேகமாக வந்தபோது பயங்கரமாக மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 25 பேருக்கு மேல் பலத்தகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சேலம், மேட்டூர், ஓமலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசுமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
இந்த விபத்து காரணமாக சேலம்-ஓமலூர் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும்,விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.6,000 வழங்கவும்உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications