Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக-புதுவை மீனவர்கள் திடீர் மோதல்: போலீஸ் துப்பாக்கி சூடு

Subscribe to Oneindia Tamil

காலாப்பட்டு:

தமிழக, பாண்டிச்சேரி மீனவர்கள் கூனிமேடு கடற்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதால்,கலவரத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

பாண்டிச்சேரி மாநிலம் காலாப்பட்டு அருகே உள்ள கூனிமேடு மீனவர் கிராமம் தமிழக பகுதியை சேர்ந்தது. இந்தகிராமத்தினருக்கும், காலாப்பட்டு மீனவ கிராமத்தினருக்கும் இடையே மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்கனவேமுன்விரோதம் இருந்து வந்தது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலாப்பட்டு மீனவர்களில் சிலர் வழக்கம் போல் கூனிமேடு கடற்கரையில் மீன்பிடிக்க சென்றனர். எப்படி எங்கள் எல்லையில் நீங்கள் மீன் பிடிக்கலாம் என்று கூனிமேடு மீனவர்கள் கேட்டதாககூறப்படுகிறது.

இந்த செய்தியை கேட்ட காலாப்பட்டு மீனவர்கள் 63 படகுகளில் சென்று தகராறு செய்தனர். இதைத் தொடர்ந்துஇரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இவர்கள் துடுப்பு, சுளுக்கி, அரிவாள் ஆகியவற்றால் தாக்கிகொண்டனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கும்பலை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி 11முறை சுட்டனர். உடனே மீனவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த மோதலில் கூனிமேடு குப்பத்தை சேர்ந்த 12 பேரும், காலாப்பட்டு மீனவப் பகுதியை சேர்ந்த 14 பேரும்படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பாண்டிச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தமிழக போலீசாரும், பாண்டிச்சேரி போலீசாரும் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவத்தால் இரு எல்லைப் பகுதிகளில் உள்ள மீனவ குப்பங்களில் பதட்டம் நிலவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+