Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் ராஜ்குமாரிடம் வாக்குமூலம் வாங்க பெங்களூர் விரையும் தமிழக போலீசார்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் ராஜ்குமாரிடம் நேரடியாக வாக்குமூலம் வாங்குவதற்காகவிரைவில் பெங்களூர் செல்ல சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியின் போது வீரப்பன், ராஜ்குமாரை கடத்தி சென்று 108 நாட்களுக்கு பின் விடுவித்தான். இதில்பணம் கைமாறியிருப்பதாக அப்போது அதிமுக கூறி வந்தது.

இந்நிலையில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த வழக்கு விசாரணை முடிக்கி விடப்பட்டது. இதைத் தொடர்ந்துநக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளின் உறவினர்களை கைது செய்து அவர்களிடமிருந்துலட்சக்கணக்கான பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் ராஜ்குமாருடன் கடத்தப்பட்டு தப்பி வந்த உதவி டைரக்டர் நாகப்பா, கடந்த 5ம் தேதி கோபிநீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அன்றைக்கே ராஜ்குமாரும் வாக்குமூலம் அளிக்க வருவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.

கோபி நீதிமன்றத்தில் அவர் வாக்குமூலம் அளிக்க விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் இந்தவழக்கை தீவிரப்படுத்துவதற்காக, வீரப்பன் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்,பெங்களூர் சென்று நேரடியாக ராஜ்குமாரிடம் வாக்குமூலம் வாங்க முடிவு செய்துள்ளனர்.

அவர் வாக்குமூலம் அளிப்பதை பொறுத்து விரைவில் நக்கீரன் கோபால், நெடுமாறன் ஆகியோர் கைதுசெய்யப்படுவர் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+