சென்னை-கொழும்பு: விரைவில் பயணிகள் கப்பல்
கொழும்பு:
சென்னைக்கும், கொழும்பு நகருக்கும் இடையே இன்னும் 2 மாதத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்துதொடங்கப்பட உள்ளது.
இலங்கையேச் சேர்ந்த கிரீன்லங்கா என்ற கப்பல் கம்பெனி இந்த கப்பல் போக்குவரத்தை நடத்த உள்ளது. இன்னும்2 மாதங்களில் கப்பல் போக்குவரத்து தொடங்கி விடும்.
இந்த கப்பல் பயண நேரம் 36 மணி நேரமாகும். இதில் 1,000 பேர் பயண செய்ய முடியும். பயணிகள் 100 கிலோஎடை வரை சரக்கு கட்டணம் எதுவும் இன்றி சரக்குகளை கொண்டு செல்லலாம்.
பயணக் கட்டணம் எவ்வளவு என்பதை இன்னும் 2 வாரங்களில் அந்த கம்பெனி அறிவிக்கும். வாரத்திற்கு எத்தனைநாட்கள் போக்குவரத்தை நடத்துவது என்பது குறித்தும் அந்த கம்பெனி இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்த விவரங்களை கிரீன்லங்கா கப்பல் போக்குவரத்து கம்பெனியின் செய்தித் தொடர்பாளர் காமினி நானயக்கராகொழும்பு நகரில் தெரிவித்தார்.
கப்பல் போக்குவரத்து நடத்துவதற்கான அனுமதியை கிரீன்லங்கா நிறுவனத்திற்ககு இந்திய அரசு சமீபத்தில்அனுமதியளித்துள்ளது.












Click it and Unblock the Notifications