கோவை குண்டு வெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு பரோல்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்உம்மா தலைவர் பாட்ஷா, கேரள மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 10 பேர் பரோலில்விடுதலை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மைசூரைச் சேர்ந்த முகம்மது தஸ்தகீர் என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு கோவை மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.
இவர் அல் உம்மா அமைப்பினருக்கு வெடிமருந்துகள் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக இவர் இறந்தார்.
இதையடுத்து தஸ்தகீருக்கு இறுதி மரியாதை செய்ய பாட்ஷா, மதானி உள்ளிட்ட 10 பேர் விருப்பம் தெரிவித்தனர்.இதையடுத்து அவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டது.
பின்னர் பாட்ஷா, மதானி, பாட்ஷாவின் மகன் அன்சாரி உள்ளிட்ட 10 பேரும் பலத்த பாதுகாப்புடன்கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தஸ்தகீருக்கு அவர்கள்இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அனைவரும் மீண்டும் சிறைக்குக் கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications