சட்ட மாணவர்கள் உண்ணாவிரதம்: 9 பேர் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து மயங்கிய வண்ணம்உள்ளனர்.
தங்கள் மீதுபோடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறக் கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரிவளாகத்திற்குள்ளேயே தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
மொட்டை போடுவது, அரை நிர்வாணமாக இருப்பது போன்ற போராட்டங்களையும் அவர்கள் நடத்திவருகிறார்கள்.
உண்ணாவிரதம் இருந்த 5 மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மயக்கமடைந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மேலும் 4 மாணவர்கள் நேற்று (புதன்கிழமை) மயங்கி விழுந்தனர். அவர்களும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
கல்லூரி முன்பு சாலையில் மறியல் போராட்டத்தையும் மாணவர்கள் புதன்கிழமை நடத்தினர். இதுதொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications