தீர்ப்பின் படி மத்திய அரசு செயல்படும்: வாஜ்பாய்
டெல்லி:
அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே மத்திய அரசு செயல்படும் என்று பிரதமர் வாஜ்பாய்இன்று (வியாழக்கிழமை) மக்களவையில் கூறினார்.
இது தொடர்பாக வாஜ்பாய் மக்களவையில் பேசியதாவது:
கடந்த 1994ல் வெளியான தீர்ப்பின் அடிப்படையிலேயே, சர்ச்சைக்கு அப்பாற்பட்ட இடத்தில் பூமி பூஜைநடத்துவதற்கு நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் சோலி சோராப்ஜி அனுமதி கேட்டுள்ளார். இதை அவராகத்தான்கேட்டுள்ளார். அது அரசின் கருத்தல்ல.
தீர்ப்பு வெளிவந்த நிலையில் இப்போதும் அதையே கூறுகிறேன். தீர்ப்பை மதித்து நடப்பது மத்திய அரசின் கடமை.எனவே அயோத்தியில் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிப்பதற்கு அரசு அனைத்துவிதமானநடவடிக்கைகளையும் எடுக்கும்.
மார்ச் 15ம் தேதி பூமி பூஜை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கோரி கடந்த 8ம் தேதி மத்திய அரசுக்குராமஜென்ம பூமி அறக்கட்டளை கடிதம் அனுப்பியிருந்தது.
ஆனால் நேற்று வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அங்கு பூஜை எதுவும் நடத்தப்பட முடியாது. மத்தியஅரசும் அதற்கு அனுமதி அளிக்காது.
அயோத்தியில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகள் மூலம் அயோத்திப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்றுநான் உறுதியாக நம்புகிறேன்.
அயோத்தியில் அமைதி நிலவ அனைத்துக் கட்சிகளும் சமுதாய அமைப்புகளும் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
அயோத்தி விவகாரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் சமரச முயற்சிகளை மேற்கொண்டதற்காக அவருக்கு நன்றிஎன்று வாஜ்பாய் கூறினார்.












Click it and Unblock the Notifications