அயோத்தி: தீர்ப்பு திருத்தப்படுகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அயோத்தியில் பூமி பூஜை நடத்தப்படக் கூடாது என்று நேற்று (புதன்கிழமை) வழங்கப்பட்ட தீர்ப்பில் சிலதிருத்தங்களைச் செய்யப் போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இன்று காலை அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜியை இந்த வழக்கை விசாரித்து வரும் மூன்று நீதிபதிகளைக்கொண்ட பெஞ்ச் திடீரென்று நீதிமன்றத்துக்கு அழைத்தது.
பூமி பூஜை தொடர்பாக நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சில முக்கியமான திருத்தங்களைச் செய்ய விரும்புவதாகமூன்று நீதிபதிகளும் அறிவித்தனர்.
இதற்குச் சம்மதம் தெரிவித்த சோராப்ஜி, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கலந்து கொள்ள வசதியாகஇன்று பிற்பகல் விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
இதையடுத்து பூமி பூஜை வழக்கின் இந்த முக்கியமான தீர்ப்பு இன்று பிற்பகல் 2 மணிக்குத் திருத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications