யாழ்ப்பாணத்தில் தங்கிய ரணில்

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்:

யாழ்ப்பாணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை மேற்கொண்டிருக்கும் இலங்கைப் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேயை அமெரிக்க அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேசினர்.

இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தையை முழுமையாக ஆதரிக்கிறோம் என்று ரணிலைச் சந்தித்தஅமெரிக்காவின் தெற்காசிய விவகாரத் துணைச் செயலாளர் கிறிஸ்டினா ரோக்கா கூறினார்.

தெற்காசியாவில் முழுவீச்சில் பயணம் மேற்கொண்டுள்ள ரோக்கா, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளைமேலும் வலுவடையச் செய்வதற்காகவே தான் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருப்பதாகக் கூறினார்.

அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இன்று பிற்பகல் பலாலி விமானத் தளத்தை அடைந்த ரோக்கா தலைமையிலானஅதிகாரிகள், விரைவில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படும்என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

பின்னர் அமெரிக்க அதிகாரிகள் யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளுக்கும் சாகவச்சேரிக்கும் செல்கின்றனர்.

நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கடத்துவதாகவும்சிறுவர்-சிறுமிகளைத் தங்கள் படைகளில் அவர்கள் சேர்ப்பதாகவும் கடந்த வாரம்தான் அமெரிக்கா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விடுதலைப்புலிகள் இதை மறுத்து குரல் கொடுத்தனர். இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கானமுயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாகத் துணைபுரியப் போவதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் தீவிரமான பயணம் மேற்கொண்டுள்ள ரணில், ஹிந்து-புத்தமதகுருமார்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் சந்தித்துப் பேசினார்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ரணில் அனைவரிடமும்கேட்டுக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+