ஆதாரங்கள் இருப்பதால் தான் ரெய்ட்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ளதற்கான ஆதாரங்கள் இருப்பதால் தான் திமுகமுக்கியப் புள்ளிகளின் வீடுகளில் ரெய்ட் நடத்தப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இது பழி வாங்கும் வகையில் நடத்தப்படவில்லை என்று கூறிய அவர், அரசின் பணத்தை இவர்கள் சுருட்டியுள்ளனர்என்று எனக்கு பல புகார்கள் வந்தன என்றார்.

கோட்டையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

இந்தப் புகார்களை நான் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறைக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டேன். இதன் பின்னர்அவர்கள் விசாரித்து ஆதாரம் இருப்பதாகக் கூறியதையடுத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்பின்னர் தான் மேலும் ஆதாரங்கள் திரட்ட ரெய்ட் நடத்தப்படுகிறது.

இதற்கான வாரண்டகளும் மாவட்ட மாஜிஸ்திரேட்களிடம் பெறப்பட்டுள்ளது. இதை லஞ்ச ஒழிப்புத்துறைசெய்கிறது. அதன் பணியில் அரசு தலையிடவில்லை.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்ட் நடத்தப்படுமா என்று லஞ்ச ஒழிப்புத்துறை தான் முடிவு செய்யும்.ரெய்ட் விவரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.

பொன்முடி தொடர்பான குற்றச்சாட்டுகள் கடந்த டிசம்பர் 6ம் தேதியே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அரசுகொடுத்துவிட்டது. அவர்கள் ஆரம்ப விசாரணை நடத்தி ஜனவரி 11ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர் என்றார்.

வரும் மார்ச் 30ம் தேதி அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார்.

அனைத்து ரெய்டுகளையும் போலீசார் வீடியோவிலும் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+