ஏப்ரல் முதல் மீண்டும் ஓட உள்ள ஊட்டி மலை ரயில்
சென்னை:
நிலச்சரிவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ள ஊட்டி மலை ரயில் ஏப்ரல் மாதத்திலிருந்து மீண்டும் ஓடத் துவங்கும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் கடந்த டிசம்பர் மாதம் தொடர் மழை காரணமாக கல்லார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ரயில் பாலம் முற்றிலும்சேதமடைந்தது. பாலத்தை மீண்டும் கட்டும் அளவுக்கு சேதம் இருந்ததால் மலை ரயில் போக்குவரத்த நிறுத்தப்பட்டது.
தற்போது பாலம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து மலை ரயில் மீண்டும்இயக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மலை ரயில்தான் முக்கிய கவர்ச்சியாக இருந்து வருகிறது. ஆனால் மலை ரயில் இல்லாதகாரணத்தால் டிசம்பர் மாதம் முதல் சுற்றுலாப் பயணிகள் கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகியிருந்தனர்.
தற்போது மீண்டும் ரயில் விடப்படவுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications