கைதிகள் தப்பிய சம்பவம்: மேலும் 2 பேர் கைது
ராமநாதபுரம்:
மதுரை அருகே அல்-உம்மா கைதிகள் தப்புவதற்கு உதவிய தீவிரவாதிகளில் ஒருவனும் அவனுக்கு அடைக்கலம்கொடுத்தவனும் ராமநாதபுரம் அருகே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பிடிபட்டனர்.
மதுரை அருகே திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் டாடா சுமோ காரில் வந்த சிலர், வெடிகுண்டுகளைவீசியும் துப்பாக்கியால் சுட்டும், இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகிய அல்-உம்மா தீவிரவாதிகளைக் கடத்திச்சென்றனர்.
ஆனால் அடுத்த இரு நாட்களிலேயே ஹைதர் அலியை சிவகங்கையில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும்கைதிகள் தப்புவதற்குக் காரணமாக இருந்த ஐ.டி.ஐ. மாணவன் ஜஹபர் சையது அலி மற்றும் நைனார் முகமது ஆகியஇரண்டு பேரையும் அடுத்தடுத்து வந்த நாட்களில் போலீசார் பிடித்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள பனைக்குளத்தில் சையது இப்ராகிம் என்பனைப் போலீசார் கைதுசெய்தனர். அல்-உம்மா கைதிகள் தப்பியதற்கு இவனும் முக்கியக் காரணமாக இருந்துள்ளான்.
இப்ராகிமுக்கு அடைக்கலம் கொடுத்த அஸ்கந்தர் என்பவனையும் போலீசார் கைது செய்தனர். இவன்பனைக்குளத்தில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறான்.
இவர்கள் இருவரும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்றிரவுமுழுவதும் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இமாம் அலியைத் தேடி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர். அவன் மாறுவேடத்தில் ரயில் மூலம் தப்பிக்கலாம் என்று கருதும் போலீசார், ரயில்நிலையங்களிலும் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications