போலீசார் அத்துமீறல்: ஸ்டாலின் மனைவி வாக்குமூலம்
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கை விசாரிப்பதற்கு வந்த போலீசார், மேயர் மு.க. ஸ்டாலின் வீட்டில் அத்து மீறி நுழைந்ததுகுறித்து ஸ்டாலின் மனைவி துர்கா மனித உரிமை கமிஷனிடம் வாக்குமூலம் அளித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் மேம்பாலம் அமைத்ததில் ஊழல் நடந்துள்ளதாக கூறிய போலீசார், சிலமாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு பற்றி விசாரிப்பதற்காக ஸ்டாலின் வீட்டுக்கு போலீசார் சென்றனர்.
ஆனால் மேயர் அங்கு இல்லை. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் அத்து மீறிப் புகுந்தனர். மேலும் மேயர்வீட்டாரிடம் அவர்கள் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்பட்டது. இது குறித்து ஸ்டாலின் மனைவி துர்கா மனிதஉரிமை கமிஷனிடம் புகார் கூறினார்.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) இந்த வழக்கு மீதான விசாரணை மனித உரிமை கமிஷன் அலுவலகத்தில்நடந்தது.
அவ்லுவலகத்துக்கு நேரில் சென்ற துர்கா, போலீசார் அத்து மீறியது குறித்து வாக்குமூலம் அளித்தார். ஆனால்சம்பந்தப்பட்ட போலீசார் வராததால், வழக்கு மீண்டும் வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications