தேனி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 அரசு உதவி
சென்னை:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பஸ் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50,000உதவித்தொகை வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை வருமாறு:
கடந்த 16ம் தேதி இரவு கம்பத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், தேனி மாவட்டம்சின்னமனூரை அடுத்த சீலையம்பட்டியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வேனில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.
இது தவிர 12 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியைஅறிந்து நான் மிகுந்த துயருற்றேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில்இருந்து தலா ரூ.50,000, பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலாரூ.6,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications