6, 7, 9 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வா? - அரசு விளக்கம்
சென்னை:
6,7 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்த உத்தரவிடப்டவில்லை என்றுதமிழக பள்ளிக் கல்வி தேர்வுகள் இயக்கக இயக்குநர் பரமசிவம் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரியில் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது 5ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும்என அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்பன்னீர்செல்வம் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில் திடீரென்று 5ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தரப்பில் அறிவிப்புவெளியானதாக வதந்தி பரவியது.
இதுதொடர்பாக பரமசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட அளவில் பொதுத் தேர்வு நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் தவறானவை.
அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இப்போதுள்ள தேர்வு முறையே இந்த ஆண்டு நீடிக்கும் என்றுகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications