192 கள்ளச் சாராய ராணிகள் உள்ளிட்ட 900 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 192 பெண்கள் உள்பட 900 பேர் கள்ளச் சாராயம் காய்ச்சி, விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மது விலக்கு கூடுதல் டிஜிபி பரம்வீர் சிங் இதுகுறித்துக் கூறுகையில்,
தமிழகம் முழுவதிலும் நடந்த கள்ளச்சாராய வேட்டையின்போது 900 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில்192 பேர் பெண்கள்.
கள்ளச்சாராயத்தை காய்ச்சி, விற்றதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 11,000 லிட்டர் கள்ளச்சாராயம் இந்த சோதனைகளின்போது பறிமுதல் செய்யப்பட்டது. 17வாகனங்களும் கைப்பற்றப்பட்டன. 40,000 சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன என்று பரம்வீர்சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications