4 தலித் பஞ்சாயத்துக்களுக்கு ஏப்.8ல் தேர்தல்
மதுரை:
மதுரை மாவட்டத்தில் உள்ள 4 தலித் பஞ்சாயத்துகளுக்கு ஏப்ரல் 8ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கானஅறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அதிகாரியுமான ராமச்சந்திரன் மதுரையில் வெளியிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கோட்டக்கச்சியேந்தல் ஆகிய 4பஞ்சாயத்துகளும் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள்.
ஆனால் 3 பஞ்சாயத்துக்களிலும் தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையாக இல்லை. இதனால் மற்ற சமுதாயத்தினர்,தங்களது தலைவராக தாழ்த்தப்பட்டோர் இருப்பதா என்ற எண்ணத்தில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்தால்கொலை செய்யப்படுவார்கள் என்று மிரட்டுகின்றனர். இதனால் தலித் மக்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முன்வரவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போதும் இங்கு யாருமே வேட்பு மனுத்தாக்கல்செய்யவில்லை. இதனால் இங்கு தேர்தல் நடக்கவில்லை.
இந்த நிலையில் 3 பஞ்சாயத்துக்களிலும் தேர்தல் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தேதியை தற்போதுமாவட்ட ஆட்சித் தலைவர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
அதன்படி, 3 பஞ்சாயத்துக்களின் தலைவர்கள், உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வரும் 20ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. 27ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும்.
28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 30ம் தேதி மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.வாக்குப் பதிவு ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும். 9ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
புதிதாக தேர்வு செய்யப்படும் தலைவர்கள், உறுப்பினர்கள் ஏப்ரல் 18ம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள்.












Click it and Unblock the Notifications