2 இந்திய தூதரக அதிகாரிகளை விரட்டுகிறது பாக்.
இஸ்லாமாபாத்:
இந்தியாவில் உள்ள 2 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாகபாகிஸ்தானில் உள்ள 2 இந்தியத் தூதரக அதிகாரிகளை நீக்க அந்நாடு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உளவு வேலை பார்த்த இரண்டு பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை இந்தியா சமீபத்தில் நாட்டை விட்டுவெளியேற்றியது.
இந்நடவடிக்கைக்குப் பழிவாங்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள இரண்டு இந்திய தூதரக அதிகாரிகள்பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு அந்நாடு உத்தரவிட்டுள்ளது.
மகேன் சிங், பிரமோத் குமார் சக்சேனா ஆகிய அந்த இரு அதிகாரிகளும் தங்களுக்குத் தொடர்பில்லாதநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான், அவர்கள் இருவரும் அடுத்த ஒருவாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படியும் உத்தரவிட்டுள்ளது.
இந்த இரு அதிகாரிகளும் அடுத்த சில தினங்களில் துபாய் வழியாக இந்தியாவுக்கு வருவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications