ரெய்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
சென்னை:
திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், பிரமுகர்கள் வீட்ல் கடந்த 4 நாட்களாக ரெய்டு நடத்தி கைப்பற்றப்பட்டபொருட்களை இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
கடந்த 4 நாட்களாக முன்னாள் திமுக அமைச்சர்கள் பொன்முடி, சமயநல்லூர் செல்வராஜ், அந்தியூர் செல்வராஜ்,முன்னாள் மதுரை மேயர் ஆகியோரது வீடுகளிலும், அவர்களின் உறவினர்கள், பினாமிகளின் வீடுகளிலும் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பல ஆவணங்கள், பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. இவற்றை மதிப்பீடு செய்யும்பணி நேற்று மாலை தொடங்கியது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சென்னைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த சோதனை முடிவு பெற்றது. பிற திமுக பிரமுகர்கள் வீடுகளில் சோதனைநடத்துவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications