தூத்துக்குடி: போதை பொருள் வைத்திருந்த 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் வைத்திருந்த 2 பேரைதூத்துக்குடியில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது 2 பேர் ஒரு பைக்கில் டூவிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை வழிமறித்து போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். இவர்களிடமிருந்து 18 கிலோ அஜீஸ் என்றபோதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி.
இதையடுத்து இமாம் கசாலி, காதர் என்ற அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications