ராஜ்குமார் கடத்தலில் தேடப்பட்ட வீரப்பன் கூட்டாளி சரண்

Subscribe to Oneindia Tamil

பெருந்துறை:

நடிகர் ராஜ்குமார் கடத்தலில் தேடப்பட்டு வந்த வீரப்பன் கூட்டாளி பெருந்துறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த ஆண்டு வீரப்பனால் கடத்தப்பட்டு 108 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க தமிழக, கர்நாடக போலீசார்தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள ஜலகண்டாபுரம் அருகேஉள்ள விண்ணப்பட்டியைச் சேர்ந்த குருசாமி (30) என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. இது குறித்துதாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவனை தேடி வந்தனர்.

இந்நிலையில் குருசாமி வக்கீல் ஒருவர் மூலம் பெருந்துறை நீதிமன்றத்தில் நீதிபதி இளங்கோவன் முன்பு சரண்அடைந்தார்.

குருசாமியை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கோயம்புத்தூர் மத்திய சிறையில்குருசாமி அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+