ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் போர்ப் பயிற்சி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் அந்நாடு நேற்று (புதன்கிழமை) திடீரென்று போர்ப் பயிற்சிநடத்தியது.
"லைன் ஆப் கன்ட்ரோல்" என்றழைக்கப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே உள்ள ரட்டா பகுதியில்திடீரென்று நேற்று ஏராளமான ராணுவத்தினரையும் ஆயுதங்களையும் பாகிஸ்தான் குவித்தது.
ஒன்றாம் தைமூர் என்ற 16ம் நூற்றாண்டு முஸ்லீம் கமாண்டர் பெயரில் அமைந்த சங்கேத வார்த்தையுடன் பின்னர்பாகிஸ்தான் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது.
அப்பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதற்காகத்தான் இந்தப் போர்ப் பயிற்சிநடத்தப்பட்டது என்று ஒரு ராணுவ கமாண்டர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் உடனடியாகப் பதிலடி கொடுக்கும் என்றும்இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே அணு ஆயுதப் போர் ஏற்படும் என்றும் சமீபத்தில்தான் அமெரிக்கஉளவுத்துறையான சி.ஐ.ஏ. எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications