ஜெ.வுக்காக நாக்கை "கட்" செய்தவருக்கு பேச்சு வந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்காக தன்னுடைய நாக்கை வெட்டிக் காணிக்கை செலுத்திய அதிமுக தொண்டர்,ஆபரேஷன் உதவியால் தற்போது மீண்டும் நன்றாகப் பேச ஆரம்பித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதால், சீர்காழியைச் சேர்ந்த ராஜாஎன்ற அதிமுக தொண்டர் தன்னுடைய நாக்கின் ஒரு பகுதியை அறுத்து திருப்பதி கோவிலில் காணிக்கைசெலுத்தினார்.

இத்தகவலை அறிந்த ஜெயலலிதா, ராஜாவை சென்னைக்கு நேரில் அழைத்து ஆறுதலும் அறிவுரையும் கூறி, ரூ.25ஆயிரம் உதவித் தொகையும் வழங்கினார்.

மேலும் அப்போலோ மருத்துவமனையில் ராஜாவுக்குச் சிகிச்சை அளிக்கவும் ஜெயலலிதா ஏற்பாடு செய்தார்.இதையடுத்து அம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜாவுக்கு, பிளாஸ்டிக் அறுவைச் சிசிச்சை நடந்தது.

டாக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்த இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம், ராஜா மீண்டும் பேசும் திறனைப் பெற்றார்.சிசிச்சை முடிந்ததும் மீண்டும் ஜெயலலிதாவைச் சந்தித்து அவர் நன்றி கூறினார்.

கழகத் தொண்டர்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் தான் அதை விரும்பவில்லைஎன்றும் அப்போது ஜெயலலிதா கூறினார்.

இதற்கிடையே சிகிச்சைக்குப் பணம் பெற்றுக் கொள்ள டாக்டர் ஸ்ரீதர் மறுத்த போதிலும், மருத்துவமனைக்கட்டணங்களை எம்.ஜி.ஆர். அறக்கட்டளை நிதியிலிருந்து வழங்க உத்தவிட்ட ஜெயலலிதா, சிகிச்சையளித்தடாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+