பேரவை துவக்கியவர்களுக்கு ஜெ., சசி கண்டனம்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலா ஆகியோர் பெயரில் பேரவையைத்துவக்கியவர்களை அவர்கள் இருவருமே கண்டித்துள்ளனர்.
சேலம் மாநகரில் ஜெ.ஜெ.-சசிகலா என்ற பெயரில் ஒரு பேரவை சமீபத்தில் துவக்கப்பட்டது. இந்த பேரவைக்குடாக்டர் சுப்ரமணியன் என்பவர் தலைவராக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த பேரவைக்கு கொடியும்அறிமுகப்படுத்தப்பட்டது.
பத்திரிக்கைகளில் வெளியான இந்த செய்தியைக் கண்டித்து முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலாவும் தனித்தனியாகஅறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுகவுக்கோ, எனக்கோ, எனது சகோதரி சசிகலாவுக்கோ எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத ஒரு நபர்,என்னுடைய படத்தையும், பெயரையும், சசிகலாவின் பெயரையும் பயன்படுத்தி ஒரு அமைப்பைத்தொடங்கியுள்ளார்.
மேலும் அந்த அமைப்புக்கு கொடியையும் உருவாக்கி, அந்த கொடியின் நடுவில் என்னுடைய படத்தைப் பதித்து,அதிமுக கொடியைப் போன்ற சாயலில் அமைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உள்நோக்கத்தோடு இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ள அந்த நபர் மீது உரிய வகையில் சட்ட நடவடிக்கைகள்எடுக்கப்படும்.
எனக்கு உறுதுணையாக இருந்து வரும் சசிகலா பெயரால் பேரவை ஒன்று அனுமதி இல்லாமல்தொடங்கப்பட்டிருப்பது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எதிரிகளின் தூண்டுதலின்பேரில் ஆரம்பிக்கப்பட்ட செயலாகும். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
என்னுடைய ஒப்புதல் இல்லாமல் அதிமுக கட்சி கொடி வண்ணத்தில் என்னுடைய படத்தையும் பதித்துவெளியிட்டிருக்கிறார்கள். இத்தகைய விஷமச் செயல்களில் ஈடுபட்டவர்களோடு அதிமுகவினர் எந்த வகையிலும்தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெ.ஜெ.-சசிகலா பேரவை என்ற பெயரில் ஓர் அமைப்பு சேலத்தில் தொடங்கப்பட்டிருப்பதாக சில பத்திரிக்கைகள்பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
இவ்வாறு எனது பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் பேரவை என்னுடைய அனுமதியை பெற்று தொடங்கப்பட்டதுஅல்ல. அதனைத் தொடங்கியவர் யாரென்றே எனக்கு தெரியாது.
என்னுடைய அனுமதியையோ, என்னுடைய விருப்பத்தையோ கேட்காமலேயே என் பெயரில் பேரவைஆரம்பித்திருப்பவர்களின் மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று சசிகலாஅவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications