வேலூரில் யானைக்கால் நோய் எதிர்ப்பு மாத்திரை சாப்பிட்ட மாணவி சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூரில் யானைக்கால் நோய் எதிர்ப்பு மாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவி இறந்ததையடுத்து அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ளது கவரம்பாளையம். இந்த பகுதியைச் சேர்ந்த வாசுதேவனின் மகள்கள்புவனா மற்றும் குணா. பள்ளியில் படித்து வருகிறார்கள்.
யானைக்கால் நோய் ஒழிப்பு தினத்தையொட்டி 24ம் தேதி வீடு வீடாக மாத்திரை வழங்கும் திட்டம் நடந்தது.
இந்த மாத்திரைகளை புவனாவும், குணாவும் சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாத்திரை சாப்பிட்டதும் இருமாணவிகளுக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இருவரும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் புவனா இறந்தார். குணா தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனைக்குமாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications