மதுரை அருகே பயங்கர கோஷ்டி மோதல்
மதுரை:
மதுரை அருகே அச்சம்பத்து என்ற இடத்தில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பலர்காயமடைந்தனர்.
அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் சமயன். இவரது மனைவி பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருக்கிறார்.இவர்களுக்கும், முன்னாள் தலைவர் கணேசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளதாகத்தெரிகிறது.
இந்நிலையில், புதன்கிழமை சமயன் வீட்டுக்கு வந்த கணேசன், அவரது காரை அடித்து நொறுக்கியுள்ளார்.வீட்டையும் தாக்கியுள்ளார். அப்போது சமயன் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் சமயன் ஆட்கள், கணேசன் வீட்டுக்குச் சென்று அவரது வீட்டை அடித்து நொறுக்கினர்.இதையடுத்து இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதனால் அச்சம்பத்து பகுதியே பரபரப்பாகியது.
தகவல் அறிந்து வந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸார் 26 பேர் மீது புகார் பதிவு செய்தனர். மோதலில்காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications