அதிரப்பள்ளி அருவியில் குளித்த 2 எல்.ஐ.சி. ஊழியர்கள் நீரில் மூழ்கி சாவு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே அதிரப்பள்ளி அருவியில் குளித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த 2 பேர்அருவியில் மூழ்கி இறந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த அதிரப்பள்ளியில் உள்ள அருவி சுற்றுலாத் தலமாகும். இந்தஅருவிக்கு சென்னையைச் சேர்ந்த எல்.ஐ.சி. நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள் 6 பேர் கடந்தவெள்ளிக்கிழமை சுற்றுலா வந்தனர்.
அதிரப்பள்ளி அருவியில் அவர்கள் 6 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சரவணன்,வாசுதேவன் ஆகிய இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் அருவி நீரில் குதித்து பல மணி நேரம் போராடி வாசுதேவன்உடலை மட்டும் மீட்டனர். சரவணனின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.
தீயணைப்புப்படையினரும், மீனவர்களும் சரவணனின் உடலை தேடிக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications