பாஜக தலைவர்களை கொல்ல சதி: 5 பேர் கைது
சென்னை:
பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம் பகுதியில் அல்-உம்மா தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் சதித் திட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தாம்பரம் விரைந்தனர்.
தாம்பரத்தில் பதுங்கியிருந்த நூர்முகமது என்பவரை போலீசார் கைது செய்தனர். இவனை விசாரித்ததில்,அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆரம்பித்தால் தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களில் குண்டு வைத்துதகர்க்கவும், பாஜக தலைவர்களை கொலை செய்யவும் திட்டம் போட்டுள்ளதாக நூர்முகமது தெரிவித்தான்.
அல்-உம்மா தீவிரவாதியான கோவை ஜாகீர் உசேனை பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்துவரும்போது, நீதிமன்றத்தை வெடிகுண்டு வீசி தகர்த்து விட்டு ஜாகீரை மீட்டுச் செல்லவும் திட்டமிட்டதைபோலீசாரிடம் அவன் தெரிவித்தான்.
இதைத் தொடர்ந்து இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்ட மேலும் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள்அனைவரும் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வந்தவர்கள்.
இவர்களிடம் இருந்து ஜெலட்டின் குச்சிகள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள், கத்தி உள்ளிட்டபயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications