குஜராத்தில் அமைதிப் பகுதிகளிலும் வன்முறை
அகமதாபாத்:
குஜராத்தில் வன்முறை தொடர்ந்து வருகிறது.
இதுவரை அமைதி நிலவி வந்த பகுதிகளிலும் இப்போது வன்முறை பரவ ஆரம்பித்திருக்கிறது.
கடந்த ஒரு மாதமாக இந்த மாநிலத்தில் வன்முறை தாண்டவமாடி வருகிறது. இதுவரை 1,100 பேர் இந்தவன்முறைகளில் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாகவீடுகளை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வன்முறை தொடர்ந்து வந்தாலும் அம் மாநில அரசின் மீது மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வேடிக்கைபார்த்து வருகிறது. மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு வன்முறையைத் தடுக்க முழு அளவில் தவறிவிட்டதாகதேசிய மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
சிறுபான்மையினத்தினர் மீதான பல தாக்குதல்கள் அரசின் முழு ஆதரவுடன் நடந்திருப்பதாகக் கூறியுள்ள மனிதஉரிமை ஆணையம இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது.
ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இதுவரை அமைதியாக இருந்து வந்த கட்ச் பகுதியிலும் நேற்று வன்முறை பரவியது. இம்மாவட்டத்தில் வன்முறை பரவாமல் தடுத்ததில் மாவட்ட எஸ்.பிக்கு முழுப் பொறுப்புள்ளதாக மனித உரிமைகமிஷன் பாராட்டி இருந்தது.
இந் நிலையில் அவரை கடந்த வாரம் அம் மாநில அரசு இடமாற்றம் செய்தது. இதனால் வன்முறைக்குத் துணைபோகாத அதிகாரிகளை மாநில அரசு குறி வைத்துளளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த எஸ்.பி. மாற்றப்பட்ட ஒரு வாரத்தில் இம் மாவட்டத்திலும் முதல்முறையாக வன்முறை ஊடுருவியுள்ளது.இங்கு நேற்றிரவு ஒரு கோவிலில் சாமி சிலை உடைக்கப்பட்டது.
இதையடுத்து இரு மசூதிகளுக்கு தீ வைக்கப்பட்டது. இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சாலைகளில் வன்முறையில்இறங்கினர். கல்வீச்சும், கத்திக் குத்துச் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications