இலங்கை: சந்திரிகாவின் தலைமை பாதுகாவலர் கைது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் பாதுகாவலர் நிஹல் கருணரத்னே இன்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டார்.

இலங்கையில் கடந்த டிசம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், தற்போது வேளாண்துறை அமைச்சராகஉள்ள திஸநாயகேவைக் கொலை செய்ய முயன்றதாக கருணரத்னே மீது குற்றம் சாட்டப்பட்டது.

சந்திரிகாவின் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநரான கருணரத்னே, கடந்த பிப்ரவரி 3ம் தேதி ஜாமீனில் வந்துவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கருணரத்னே, அவ்வாறு செய்யாமல்தான் வரமுடியாததற்கு காரணம் கூறி ஒரு மருத்துவச் சான்றிதழை மட்டும் அனுப்பி வைத்தார்.

ஆனால் அந்த மருத்துவச் சான்றிதழில் உள்ள தேதியும் ஆஜராகச் சொன்ன தேதியும் முரண்பாடாக இருப்பதாகக்கூறி அதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிமன்றம், கருணரத்னேயை கைது செய்து போலீஸ் காவலில் வைக்கஉத்தரவிட்டது.

இதையடுத்து கருணரத்னேயை இன்று போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்படும் பட்சத்தில், கருணரத்னே நிச்சயம் சஸ்பெண்ட்செய்யப்படுவது உறுதி என்று கூறப்பட்டது. அதன்படி அவர் விரைவிடல் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது

இலங்கை அதிபர் ஒருவரின் பாதுகாவலர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருப்பதும் பின்னர்கைதாகியிருப்பதும் இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+