"ரவுடித்தனம்" புகழ் மிசா பாண்டியன் மீண்டும் கைது
மதுரை:
அதிமுக பிரமுகரைத் தாக்கியது தொடர்பாக மதுரை மாநகர முன்னாள் மேயரான மிசா பாண்டியன் கைதுசெய்யப்பட்டார்.
மதுரையில் நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரண்டரான மிசாபாண்டியன், கடந்த மாதம் 21ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு காரணமாக அவர் கடந்த ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிமுகவில்சேர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரானார்.
இந்நிலையில் மதுரை-ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் மிசா பாண்டியன் தன்னைத் தாக்கியதாகநேற்று (திங்கள்கிழமை) போலீசில் புகார் கொடுத்தார்.
ஜெயராமனிடம் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், அவரை மிசா பாண்டியன்தாக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாண்டியனைப் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications