ராஜ்யசபா எம்.பியாக வாசன் நாளை பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தமாகா உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் ராஜ்யசபா எம்.பிக்களாக நாளை(புதன்கிழமை) பதவியேற்க உள்ளனர்.
வாசன் தவிர, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏவான தங்கதமிழ்ச் செல்வன், வழக்கறிஞர் ஜோதி, சையது கான் மற்றும் சீ. பெருமாள்ஆகியோர் ராஜ்யசபா எம்.பிக்களாக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆறு பேரும் நாளை ராஜ்யசபாவில் பதவியேற்க உள்ளனர். இவர்களுக்கு துணை ஜனாதிபதியும்ராஜ்யசபா சபாநாயகருமான கிருஷ்ணகாந்த் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இந்த ஆறு பேரைத் தவிர, இந்தியா முழுவதிலுமிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 16 பேரும்நாளை எம்.பிக்களாகப் பதவியேற்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications