பிற்பகல் 1 முதல் 2 மணி வரை ஜெ.யிடம் மனு தரலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரடியாக மனுக்களைக் கொடுக்க விரும்புபவர்கள், தினமும் பிற்பகல் 1 முதல் 2மணிக்குள் தலைமைச் செயலகத்தில் வந்து கொடுக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுக்க விரும்புவோர் தலைமைச் செயலகத்தில் தினந்தோறும் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்கவிரும்புவோருக்கு வசதியாக, பிற்பகல் நேரத்தை ஒதுக்கி தர முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

எனவே பொதுவாக முதல்வரிடம் மனு கொடுக்க விரும்புவோர், தலைமைச் செயலகத்தில், முதல்வரின்தனிப்பிரிவில் எல்லா வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மனுக்களை கொடுக்கலாம்.

மேலும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனுக்களை கொடுக்க விரும்புபவர்கள், தலைமைச் செயலகத்தில் நுழைவுவாயிலுக்கு அருகில் பிற்பகல் 1 முதல் 2 மணி வரை அவரிடம் மனுக்களை கொடுக்கலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று பல நாட்கள் அலைந்து திரிந்த கோயம்புத்தூர்தம்பதி வேலு-நளினி தற்கொலைக்குப் பிறகு இந்த முக்கியமான முடிவை ஜெயலலிதா எடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+